உத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை

உத்தரபிரதேச சட்ட  சபை தேர்தலின்போது, பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் பெண்களிடம் குறும்பு செய்யும் நபர்களையும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளையும் ஒடுக்க ‘ஆன்டிரோமியோ’ படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததையடுத்து முதல்மந்திரி ஆதித்யநாத் ஆன்டி ரோமியோபடையை உடனடியாக அமைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தபடை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முக்கிய நகரங்களில் உலா வந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பார்கள்.

உத்தரபிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் டி.ஜி.பி. சுல்கான்சிங் மாநிலபோலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ‘ஆன்டி ரோமியோ’ படை போலீசார் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 3 மணிநேரம் நடந்த இந்த கூட்டத்தில் ‘ஆன்டி ரோமியோ’ படையினர் எதை, எதை செய்யலாம். எதை செய்யக் கூடாது என்பது குறித்து டி.ஜி.பி. சுல்கான் சிங் விளக்கினார்.

‘ஆன்டி ரோமியோ’ படையில் உள்ள அனைத்து போலீசாரும் உடலில் பொருத்தக் கூடிய கண்காணிப்பு கேமராவை அணிந்திருக்க வேண்டும். அந்தகேமரா மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்கள் மற்றும் சமூக விரோதசெயல்களில் ஈடுபடுபவர்கள் செய்யும் செயல்களை ரகசியமாக படம்பிடிக்க வேண்டும்.

இதுபோன்ற குற்றங்களை செய்யும் மாணவர்கள், இளைஞர்களை உடனடியாக பிடிக்கவேண்டும். அவர்களை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டியதில்லை.

அவர்களுடைய பெற்றோரை அழைத்து அந்தநபர்களின் நடவடிக்கை குறித்து விளக்கவேண்டும். கேமராவில் எடுக்கப்பட்ட படகாட்சிகளையும் அவர்களிடம் காண்பிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்களாக இருந்தால் கல்லூரி முதல்வரிடம் இதுபற்றி தெரிவிக்கவேண்டும். ‘ஆன்டி ரோமியோ’ படையினர் விசாரணை நடத்துவது, வழக்குப்பதிவு செய்வது போன்ற பணிகளை செய்ய வேண்டியதில்லை. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யும் பணிகளை மட்டும் செய்ய வேண்டும்.

மேலும் பசுவதை தடுப்பு என்றபெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும். டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...