இமாச்சல பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும்

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த வீரபத்ரசிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல்நடைபெற உள்ளது.

இந்நிலையில், சிம்லாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி கூறும்போது, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்ததைப்போல இமாச்சலிலும் மாற்றம் நிகழவேண்டும் என்றார்.

அவர் கூறும் போது, ''இப்போது காலங்கள் மாறிவருகின்றன. உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வீசும் தூய்மையான காற்று இமாச்சல பிரதேசத்தையும் நோக்கிப்பயணிக்கிறது. டெல்லியிலும் (மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி) இதேபோல் தூய்மையான காற்றுவீசுகிறது'' என்றார்.

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் ஊழல் வழக்குகளில் சிக்கி இருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்ட மோடி, ''நாட்டில் உள்ள முதல்வர்களிலேயே வழக்கறிஞர்களுடன் அதிகநேரம் செலவிடும் முதல்வர் (வீரபத்ர சிங்) இவர்தான். இந்தமாநில மக்கள் நேர்மையான தலைவரை எதிர்நோக்கி உள்ளனர்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...