ராணுவ விமானங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை கூட்டுநிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு இந்தியாவும், ரஷியாவும் ஒப்புதல்

ராணுவ விமானங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை கூட்டுநிறுவனம் மூலம் தயாரிப்பதற்கு இந்தியாவும், ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து ரஷியா சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வியாழக் கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகள் குறித்தும் தலைவர்கள் இருவரும் விவாதித்தனர்.


பின்னர், விளாதிமீர் புதின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது சந்திப்பு எப்போதும் நட்புறவோடும், ஆக்கப் பூர்வமானதாகவும் இருக்கும். அதுபோலவே முறை நடைபெற்ற சந்திப்பும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது.
இந்தியா- ரஷியா இடையே அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகியதுறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் எங்களது பேச்சுவார்த்தை இருந்தது.


இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வந்தநிலையில், நிகழாண்டின் முதல் பகுதியில் மீண்டும் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மருந்து தயாரிப்பு, விமானங்கள் மற்றும் வாகனங்கள் தயாரிப்பு, வைரத்தொழில், விவசாயம் ஆகியவற்றுக்காக, கூட்டு நிறுவனங்களை உருவாக்கும் வகையில், 19 திட்டங்களுக்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இவை அனைத்தும், இந்தியா-ரஷியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆக்கப் பூர்வ பயணத்தை ஒருங்கிணைப்பதற்கு நாங்கள் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.


அதன்படி, இந்தியாவுக்கு அதி நவீன ராணுவ உபகரணங்களை அனுப்புவதோடு நின்றுவிடாமல், ரஷியாவின் பங்களிப்புடன் இந்தியாவில் ராணுவ வாகனங்களைக் கட்டும்தளம் உருவாக்கப்படும். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் மின்உற்பத்தி நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகள், போக்கு வரத்து உள்கட்டமைப்பு வசதிகள், உருக்குத் தொழிற்சாலை ஆகியவற்றை ரஷியா அமைத்து கொடுத்திருக்கிறது. இந்தியாவும், ரஷியாவும் இணைந்தே வளர்ந்திருப்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...