இந்தியாவின் வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடையும் சீனா

1962ம் ஆண்டு இருந்த இந்தியா இப்போது உண்மையிலேயே இல்லை. அப்போது இருந்ததை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ பலத்துடன் இந்தியா விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வியாபித்து நிற்பதுதான் சீனாவை கடும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. இதனால்தான் சீனா நம் மீது காரணமே இல்லாமல் கோபம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவும் இதையேதான் கூறுகிறது. உண்மையிலேயே இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவை பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரீதமாக இருப்பதாக பென்டகன் கூறியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை அது அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், உலக நாடுகளுடன் இந்தியா இதுவரை இல்லாத அளவு நெருங்கி வருவதையும், பல உலக நாடுகள் இந்தியா மீது பாசத்தைப் பொழிவதும் கூட சீனாவுக்குப் பிடிக்கவில்லை. இடையில் விட்டுப் போயிருந்த ரஷ்ய நட்பையும் இந்தியா மீண்டும் வலுவாக்கி விட்டதும் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானுடன் உறவு பாராட்டி பாகிஸ்தானை உலக நாடுகளிடம் தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்து வருவதும் சீனாவின் கோபத்துக்கு ஒரு காரணம்.

இன்னொரு பக்கம் ஈரானுடன் உறவு பாராட்டி துறைமுக ஒப்பந்தம் போட்டு அதை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது இன்னொருவகை எரிச்சல்

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி என்ற நிலையை நோக்கி சீனா போய்க் கொண்டுள்ளது. ஆனாலும் அதற்கு கடும் போட்டியாக இந்தியாவும் வளர்ந்து வருவது சீனாவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இது இன்னொரு எரிச்சல்.

பொருளாதார ரீதியில் இந்தியா சுய சார்பை நோக்கி போய்க் கொண்டுள்ள அதேசமயத்தில் ராணுவ ரீதியிலும், விண்வெளி ஆய்விலும் இந்தியா கலக்கிக் கொண்டிருப்பதும் சீனாவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ள இன்னொரு விஷயமாகும்.

பல சர்வதேச நாடுகள் சீனாவை விட இந்தியாவை முக்கியமாக கருதுவதும் கூட சீனாவுக்குப் பிடிக்கவில்லை. அதையும் அது வெறுக்கிறது. இதுவும் கூட இந்தியா மீது சீனா ஆத்திரம் கொள்ள இன்னொரு காரணம்.

இந்திய எல்லையில் கடந்த சில வருடங்களாகவே தனது படைகளை சீனா அதிகரித்து வருகிறது. மிக நவீனமான சிசிஎஸ்-5 ரக அணு ஆயுத ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியுள்ளது. எல்லையில் பாராசூட் படையினரின் எண்ணிக்கையையும் போர் விமானங்களின் எண்ணிக்கையயும் அதிகரித்துள்ளது சீனா. மத்திய சீனாவின் குயின்காய் மாகாணத்தில் டெலின்ஹா, டா குவைடாம் ஆகிய இடங்களில் 60 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்துள்ளது. இங்கிருந்து வட இந்தியாவை குறி வைப்பது எளிது என்பதால் இந்த ஏவுதங்களை சீனா கட்டியுள்ளதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன.

ஆனால் இந்தியா பழைய மன்மோகன் சிங்காக இல்லை என்பதை சீனா மறந்து விட்டது. 1962ம் ஆண்டு சீனாவிடம் படு மோசமாக தோற்ற போது இருந்த நிலையில் இந்திய ராணுவம் இப்போது இல்லை. இந்தியாவும் தனது படைகளை பலமடங்கு அதிகரித்துவிட்டதோடு, ஆயுதங்களையும் குவித்து விட்டது. நிச்சயம். சீனாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இந்தியாவின் வலிமையும் பலமாகவே உள்ளது.

நமது படையினருக்கு மிக நவீன ஆயுதங்கள், மிகத் தரமான பயிற்சிகள் தரப்பட்டு இந்திய ராணுவம் உலகின் மிகச் சிறந்த படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தனது ஏவுகணைகளின் சக்தியையும் பயணிக்கும் தூரத்தையும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தியா, மிக நவீனான சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்களை சீனாவை ஒட்டிய பகுதிகளி்ல் எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளது. இவை உலகின் நவீனமான போர் விமானங்களில் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு எல்லை பிரச்னை நம்மிடம் மட்டும் அல்ல . 21 நாடுகளிடம் எல்லை பிரச்னை, இது போக ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனா கடற்படை தளம் அமைக்கிறது ,, இது மேலை நாடுகளாகிய வல்லரசு நாடுகளுக்கு புடிக்கவே இல்லை அந்த வல்லரசுகளும் சீனாவை தீர்த்து கட்ட இந்தியாவின் கண் அசைவுக்காக காத்து இருக்கின்றன ,, ஒரு தீப்பொறியை எதிர்பார்க்கிறது

அது மட்டுமல்ல. உலகமும் இப்போது நிறையவே மாறி விட்டது. எந்த நாடுகள் உலகத்திற்கு புடிக்காதோ அந்த நாடுகள் ( 2 நாடுகள் தான் வட கொரியா, பாகிஸ்தான் ) எல்லாம் சீனாவுக்கு நண்பன் இந்தியா இப்போது பல உலக வல்லரசுகளின் செல்லப் பிள்ளை.

பல நாடுகளின் உயிர் நண்பனாக உலகில் வளம் வருகிறது இந்தியா ,, இஸ்ரேல் பிரதமர் கூறியதை உலக நாடுகள் ஆராய்ந்து பார்க்காமல் விடுமா என்ன .. அமெரிக்கா அதிபர் வாசல் வரை வந்து வரவேற்றதையும், வழி அனுப்பியது உலகம் மறக்குமா என்ன

இந்தியாவைப் போன்றதொரு நல்ல நப்பு நாடு அடிவாங்குவதை இந்த நாடுகள் நிச்சயம் வேடிக்கை பார்க்காது. எனவே சீனா போர் தொடுக்க முற்பட்டால் நிச்சயம் சீனாவை பலவிதங்களில் இந்த நாடுகள் அழித்து ஒழிக்க முற்படும்.என்ற நிலை தான் இப்போது உள்ளது ..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.