மற்ற மொழிகள் மீது இந்தியை திணிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை

இந்தி மொழி தெரியாதவர்கள் அந்த மொழியை பயன்படுத்த தேவையில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்

துளு மற்றும் கொடுவா ஆகியமொழிகளை இந்திய அரசமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் பி.கே.ஹரி பிரசாத் தனி நபர் மசோதாவை கொண்டு வந்தார். அதற்கு மத்திய இணை அமைச்சரும், அரசுமொழிகள் துறைகளின் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இந்தி என்பது அரசுமொழி, மற்ற இந்தியமொழிகள் தேசிய மொழிகளாகும். மற்ற மொழிகள் மீது இந்தியை திணிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்திபயன்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டோம். இந்தியை ஊக்குவிக்கவோ, அதன் பயன்பாட்டை அதிகரிக்கவோ மத்திய அரசு சிறப்புமுயற்சிகள் எதையும் செய்யவில்லை.

இந்தி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதுதான். அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநிலமொழிகளை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. மொழி என்பது மிகவும் உணர்ச்சி பூர்வமான விஷயமாகும். தவறான விளக்கத்தின் மூலம் தவறாக வழிநடத்தி விட்டால் நாட்டில் மிகவும் பெரிய கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...