புதன் கிழமையுடன் 3 ஆண்டுகளை அமித்ஷா நிறைவு செய்தார்

பாஜகவின் தேசியத்தலைவராகப் பொறுப்பேற்று புதன் கிழமையுடன் 3 ஆண்டுகளை அமித்ஷா நிறைவு செய்கிறார்.கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சிக்குவருவதற்கு முன், அக்கட்சி இருந்த நிலைமையை அமித் ஷாவும், பிரதமர் மோடியும் தற்போது மாற்றியுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரைகளும், அமித் ஷாவின் நிர்வாகத் திறமையும் பாஜகவை மொத்தம் 13 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்ற வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், 5 மாநிலங்களில் கூட்டணிகட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
ஆகமொத்தம் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சிபுரிந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.


அமித் ஷாவின் சிறந்த நிர்வாகப்பணி காரணமாக, அஸ்ஸாம், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து முதல் முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அமித் ஷாவின் கட்சிப்பணிகள் குறித்து பாஜகவினர் கூறியதாவது:நாடுமுழுவதும் கட்சியை விரிவுப்படுத்தியவர் அமித் ஷா.
பாஜக நிறுவனர்களான ஷியாம பிரசாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்யாய் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி அமித் ஷா கட்சிப் பணியாற்றி வருகிறார்.


பெண் குழந்தை கல்வித் திட்டம், தூய்மை கங்கை திட்டம், பயிர்க்காப்பீடு திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கட்சியினருக்கு அமித் ஷா வலியுறுத்தி வந்தார். இதன்காரணமாக, இந்தத் திட்டங்கள் அனைத்து தரப்புமக்களிடம் சென்று சேர்ந்தது.


ஒடிஸா, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் பலத்தை அதிகரிப்பதற்கான பல்வேறுபணிகளில் அமித் ஷா கவனம் செலுத்தி வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளும் தினமும் 541 கி.மீ. தொலைவுக்கு கட்சிக்காகப் பயணம் செய்து பணியாற்றியவர் அமித் ஷா. அவரது சிறப்பான பணி 4-ஆவது ஆண்டிலும் தொடரும் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...