நீங்கள் அமைதியை விரும்புகிறீரா? அப்படியானால் உங்களை மறந்து விடுக.

தென்னிந்திய நாட்டுப்புறத்தல் எளிய பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது வருமாறு :

நல்லவர் இருவர் குறுகிய நடைபாதை ஒன்றில் எதிர் எதிராக நடந்து சென்றால் மூன்று பாதைகள் இருக்கும். நல்லவர் ஒருவரே என்றால் இரண்டு பாதைகள் இருக்கும். இருவருமே கெட்டவர்கள் என்றால் ஒரு பாதை மட்டுமே இருக்கும்.

இதற்கு விளக்கம் தேவைப்படலாம். இருவரும் நல்லவர்களாயின், ஒவ்வொருவரும் அடுத்தவர் பாதையில் நடந்து செல்வதற்கு ஏதுவாகப் பாதையை விட்டுச் சற்று விலகி நடந்து செல்வார். அதனால் ஏற்கனவே இருந்த பாதையின் இரு பக்கத்திலும் புதியதாக இருபாதைகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்சிரிப்புடன் வசதியாக நடந்து செல்வார்கள்.

ஒருவர் நல்லவராகவும், மற்றொருவர் கெட்டவராகவும் இருந்தால் நல்லவர் அடுத்தவருக்காகப் பாதையை விட்டு விலகி நடந்து செல்வார். ஆகையால் இரு பாதைகள் இருக்கும். இருவரும் கெட்டவர்களாக இருந்தால், “ஏய் நீ விலகிப் போடா”, “நான் ஏன் விலக வேண்டும்? நீ என்ன பெரிய கொம்பனா! நீ விலகிப் போடா” என்று சொல்லி, ஒருவரை ஒருவர் தள்ளுவான். எனவே ஒரே பாதைதான் இருக்கும்.

இந்தக் கதையின் கருத்து என்ன? நீங்கள் அமைதியை விரும்புகிறீரா; அப்படியானால் உங்களை மறந்து விடுக. முதலில் அடுத்தவரின் நன்மையைக் கருதுவீராக.

நான் உங்களுக்கு எவ்வாறு சேவை செய்வேன்? எவ்வாறு உங்கள் நலனைப் பெறுவேன்? என்று கேட்பீராக. இதுவே சரியான வழி. சேவையால் உடன்பாடு நிலவும். அன்பு செலுத்துக. சேவை செய்க. முதலிடம் அடுத்தவருக்கு. இத்தகைய மனப்பான்மை நிலவினால், அகில உலகமூம் அற்புதமான இடமாக விளங்கும்.

– சுவாமி சச்சிதானந்தா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...