உத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் அந்தமாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர்கள் கேசவ்பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
பாஜக புதன் கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தத்தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரப்பிரதேச சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா ஆகியோரும், உத்தரப்பிரதேச அமைச்சர்கள் ஸ்வதந்திர தேவ் சிங், மோசின் ரஸா ஆகியோரும் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என்று அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜவாதி கட்சியைச்சேர்ந்த சில சட்ட மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) அண்மையில் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். அதைத்தொடர்ந்து, காலியான அந்த இடங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
யோகி ஆதித்யநாத் உள்பட 5 பாஜக வேட்பாளர்களும் மாநில இரு அவைகளிலும் தற்போது உறுப்பினர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.