பசுக்களை நேசிப்பவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்

பசுக்களை நேசிப்பவர்கள், தங்களது உணர்வுகள் காயப்படுத்தப் பட்டாலும், வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத் கூறினார்.


கடந்த சிலமாதங்களாக, பசு பாதுகாவலர்கள் என்றபெயரில் சில கும்பல்கள் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறினார்.


6 நாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றுள்ள அவர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜாம்டோலி என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் குறித்து தொண்டர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது: பசுக்களை நேசிப்பவர்கள், தாங்களாகவே அவற்றை வளர்த்து, பராமரித்து வருகிறார்கள். அவர்கள், தங்களது உணர்வுகள் காயப்படுத்தப் பட்டாலும் வன்முறையைக் கையிலெடுக்க மாட்டார்கள் என்றார் மோகன்பாகவத்.
சீனத்தயாரிப்புகள் குறித்து மற்றொரு தொண்டர் எழுப்பினார். அதற்கு, ''உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதால், சிறிய தொழிற் சாலைகளில் பணிபுரியும் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது; மேலும், உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன் படுத்துவதால் திருப்தியும் கிடைக்கிறது'' என்று மோகன் பாகவத் பதிலளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...