பெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த சிலநாள்களில் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், எரிபொருள்கள் மீதான வரியைக்குறைக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய தர்மேந்திர பிரதான் இதுதொடர்பாக கூறியதாவது:
சர்வதேச கச்சா எண்ணெய் விலையானது அமெரிக்கப் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. கடந்த 20 ஆண்டுகளாக இத்தகையநிலை உள்ளது. இந்த சூழலில், அந்நாட்டில் அண்மையில் நேரிட்டபேரிடரானது (புயல்) எரிபொருள் சந்தையிலும் எதிரொலித்தது.
அதன் விளைவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைஉயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இருப்பினும் கடந்த சிலநாள்களாக இந்த நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது. அடுத்து வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை சரிவடையக்கூடும். அதன் தாக்கமாக இந்தியாவிலும் எரிபொருள் விலை குறையும். அதேவேளையில் பெட்ரோல், டீசல்மீதான வரிகளைக் குறைக்கவோ, ரத்து செய்யவோ இயலாது. நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வரிவருவாய்தான் மூலதனமாக விளங்குகிறது. எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து விட்டால், நல்ல சாலைகளும், தூய குடிநீரும், தரமான கல்வி, மருத்துவமும் தேவையில்லையா?
ஜிஎஸ்டி (சரக்கு – சேவை வரி) வரம்புக்குள் பெட்ரோலியப் பொருள்கள் விரைவில் கொண்டு வரப்படும் என்றார் அவர்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.