காவல் துறை நவீனப் படுத்துதல் உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள, 25 ஆயிரம்கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது," என, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
பிரதமர், நரேந்திரமோடி தலைமையில் நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த மூன்று நிதியாண்டுகளில் மேற்கொள்ள
உள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத்சிங் கூறியதாவது:
காவல்துறையை நவீனப் படுத்துதல் என்ற திட்டத்தின்கீழ், 2017 -18 மற்றும், 2019-20 நிதி ஆண்டுகளில் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக, மத்திய அரசு சார்பில், 18,636 கோடிரூபாயும், மாநிலங்கள் சார்பில், 6,424 கோடி ரூபாயும் செலவிடப்பட உள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, மகளிர்பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் வாங்குவது, வயர்லெஸ் முறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இந்தநிதியில்,10,132 கோடி ரூபாய்,ஜம்மு – காஷ்மீர்,
வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல்பாதிப்பு உள்ள மாநிலங்களில் செலவிடப்பட உள்ளது.நாடுமுழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் இணைக்கப்பட்டு, குற்றவாளிகள் குறித்த தகவல்கள், பல்வேறுபாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப் படும். தடய வியல் துறையில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப் படும்.
ஆந்திர மாநிலம் அமராவதியில், அதிநவீன வசதிகள் உடைய, தடய அறிவியல்மையம் அமைக்கப்பட உள்ளது. இதைத் தவிர ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி யாளர்கள் தடுப்பு மையம் சர்வதேச தரத்தில் அமைகிறது. குஜராத்மாநிலம், காந்திநகரில் தடய அறிவியல் பல்கலை அமைக்கப்பட உள்ளது.
காவல் துறையை நவீனப்படுத்தி, அனைத்து வசதிகள் உள்ளதாக உயர்த்தும் போது, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.