வெள்ளம், வறட்சியை சமாளிக்க, நதிகள் இணைப்புத் திட்டம் மிகவும் அவசியம்

குஜராத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியுடன் அண்மையில் நான் சென்றிருந்தேன். அப்போது நதிகள் இணைப்பு திட்டம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அவர் அந்தத்திட்டத்தை ஏற்றுக்கொண்டார். அந்தத் திட்டத்தை செயல்படுத்த நமக்கு மிகப் பெரிய முதலீடுகள் தேவைப் படுகிறது. அதனால், அந்தத் திட்டத்துக்காக மிகப்பெரிய நிதித் தொகுப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அரசு ஆய்வு செய்துவருகிறது.


மத்திய அமைச்சரவையில் இதுதொடர்பான திட்டத்தை எனது அமைச்சகம் சமர்ப்பிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள 285 நீர்ப் பாசனத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்தத்திட்டத்தால், 1.88 கோடி ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயனடையும். இது தவிர, 27 நீர்ப்பாசனத் திட்டங்கள், இந்த ஆண்டின் இறுதியில் செயல்படுத்தி முடிக்கப்படவுள்ளன.


சொட்டுநீர் பாசனம், குழாய் மூலம் நீர்ப்பாசனம் ஆகியவைக்கே அரசு அதிக முன்னுரிமை கொடுத்துவருகிறது. இதனால்தான், தண்ணீரை சேமிக்க முடியும். மேலும், நிலம் கையகப்படுத்த செலவிடப்படும் தொகையும் மிச்சப்படும். குழாய் மூலம் பாசனத்துக்கு நீர் கொண்டு செல்வதால், நிலத்தை கையகப்படுத்தி கால்வாய்கள் அமைக்கச் செலவிடப்படும் தொகையில் ரூ.5 ஆயிரம் கோடியை சேமிக்க முடியும்.


வெள்ளம், வறட்சியை சமாளிப்பதற்கு, நதிகள் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். மத்திய அரசு தற்போது நதிகள் இணைப்பு தொடர்பான 30 திட்டங்களுக்கு ஒப்புதலை அளித்துள்ளது. அதில் 3 திட்டங்கள், விரைவில் தொடங்கவுள்ளது.


கழிவு நீரை வேறுவழியில் உபயோகிப்பதற்கான புதியவழிகளை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. 
என்டிபிசி மின் நிலையங்களுக்கு கழிவு நீரை பயன் படுத்த முடியுமா? என்பதை ஆராயும்படி, மத்திய மின்சாரத் துறை அமைச்சருக்கு நான்கோரிக்கை விடுத்துள்ளேன்.

மத்திய நீர் வளங்கள், நதி நீர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'இந்தியா தண்ணீர் வாரம்-2017' எனும் நிகழ்ச்சியில், பேசியது:

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...