கர்மா உங்கள் செயல்களுக்கு எதிர் வினையாற்ற தவறுவது இல்லை

ஸ்டாலின் 30 வருஷமா முதல்வர் கனவிலும்… சசிகலா 30 வருசமா முதல்வர் கனவிலும் இருந்தார்கள்… ஆனால்…  ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமாகி விட்டார்கள்… எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும்போதே… ராஜீவும், பிரபாகரனும் தங்கள் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள் இன்னொருவரால்…

 

ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்…  ஆனால்… சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் சிறுநீர் கழிக்க கூட சிரமப்பட்டு சிறுநீரை சுமக்க வாளியோடு சுற்றினார்…

 

ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்…. கருணாநிதி அழியணும் என்று ஜெயலலிதாவும் நினைத்தார்கள்…ஆனால் கண்ணுக்கு எட்டிய வரை எதிரியே இல்லை என்ற ஜெயலலிதா இறந்துவிட்டார். பிறகு குற்றவாளி என அறிவிக்கவும் பட்டார்.

ஆனால்.. கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எந்தவொரு கருத்தும் சொல்ல இயலவில்லை கருணாநிதியால்…93 வயதிலேயே நூறாண்டு கொண்டாட்ட ஆசை கருணாநிதிக்கு… 

அது நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது… ஆனால் அதை உணரும் நிலையில் கருணாநிதி இருப்பாரா என உறுதியாக சொல்ல முடியாது…. மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆட … . ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு தெற்கு ஆசியாவே ஆடுகிறது…

 

உலகமே தங்களுக்கு கட்டுப்படணும்னு நினைக்கும் வெளிநாட்டு முஸ்லிம்கள் நாளுக்கு நாள் தங்களுக்குள்ளேயே சிதறுகிறார்கள். உயிர் வாழமட்டுமே சிதறி ஓடிய யூதர்கள் ஒருங்கிணைகிறார்கள்.விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்… ஆனால் பூமி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது.

 

கர்மா… 

உங்களுக்கு எதிராக வினையாற்றுவதில்லை… உங்கள் செயல்களுக்கு எதிர் வினையாற்ற தவறுவதும் இல்லை. உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒருவடிவில் உங்களிடம் சேர்த்துவிடும் மிகச் சிறந்த நிர்வாகிதான் கர்மா.

யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. பாலமும்… சுவரும் கட்டிடத் தொழிலாளர்களால் தான் கட்டப்படுகிறது.. சுவர் பிரிக்கிறது… பாலம் இணைக்கிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது. கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் தீமையை அகற்றுவோம்.

நன்மையை விதைப்போம். நல்லவர்களே!… நல்ல சிந்தனையோடு நாலு பேருக்கு உதவுங்கள். அதுதான் தர்மம் காக்கும் நல் அரசியல். கெட்டவன் தானே தன் அழிவை தேடிக்கொள்வான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...