மோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணிகள் அச்சம்

பிரதமர் நரேந்திரமோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் சந்தித்தது திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணி களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது என்று திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 4-ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடந்து வருகிறது.

இந்த மாபெரும் ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தினகரன் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சுய அதிகாரம்பெற்ற வருமான வரி துறையினரின் சோதனையை அரசியலாக்க வேண்டாம். மற்றமாநிலங்களில் பாஜக.,வினரின் நிறுவனங்களில் கூட வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளது.

உணவுப் பொருட்கள், ஹோட்டல் உணவுகளுக்கு ஜிஎஸ்டி பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது. இன்னும் சிலமாதங்களில் ஜிஎஸ்டி வரியின் தேவையை வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள். சென்னைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்ததில் திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...