சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5 லட்சம்கோடி டாலர் என்கிற நிலையை எட்டும்

உலகளவில் மூன்றாவது பெரியபொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ்பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தவளர்ச்சியை அடைய இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

சிறு தொழில்துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இது தொடர் பாக கூறியதாவது; எஸ்.எம்.இ துறையின் பங்களிப்புடன், இந்திய ஜிடிபியில் உற்பத்தித்துறை யின் பங்களிப்பு 20 சதவீதமாக இருப்பதை அரசு உறுதிபடுத்தும். பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மிகச்சிறந்த உத்திகளை வழங்கும். இதன்காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5 லட்சம்கோடி டாலர் என்கிற நிலையை எட்டும். இதில் உற்பத்தி துறையிலிருந்து மட்டும் 1 லட்சம்கோடி டாலர் பங்களிப்பு இருக்கும். உற்பத்தித்துறையின் வளர்ச்சியை சாத்தியமாக்க சர்வதேச வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அடையாளம் காணும் முயற்சிகளிலும் அரசுஈடுபட்டுள்ளது.

2008-ம் ஆண்டில் சர்வதேச மந்தநிலை உருவானபோது மிகப்பெரிய வங்கிகள் அதிக நஷ்டத்தை சந்தித்ததாக சில நாடுகள் கூறின. இந்தவங்கிகளுக்கு அதிக அளவிலான தொகை மறுமூலதனம் செய்யப்பட்டது. ஆனால் சிறுதொழில் நிறுவனங்கள் சிறிய அளவிலான வெற்றிபெற்றதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. வங்கிகள் எவ்வளவு பெரியதாக இருந்ததோ அவ்வளவு பெரியதோல்வியை சந்தித்தன. சிறிய நிறுவனங்கள் தங்களுக்கேற்ற சிறியவெற்றியை சந்தித்தன. அதனால் எஸ்எம்இ துறையில் உலக நாடுகள் சிறிய அளவில் முதலீடுகளைசெய்தன. அதன் காரணமாக இப்போது சர்வதேச மந்த நிலை சீரடைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...