மேகாலயாவில் ஷில்லாங்-துரா சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங் – நாங்ஸ் டோய்ன் – ராங்ஜியங் – துரா சாலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். ஷில்லாங் நகரில் நடைபெற்ற திறப்புவிழாவில் கலந்துகொண்ட மோடி சாலையை திறந்த பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மாநிலத்தின் ஷில்லாங் மற்றும் துராநகர்களை இந்தசாலை இணைக்கிறது. இதன் மூலம் பயண நேரத்தை வெகுவாக குறைக்கலாம். போக்குவரத்து மூலம் மாற்றத்தை கொண்டுவருவதே நமது நோக்கமாகும்.

கடந்த 2014 ம் ஆண்டு பாஜக. ஆட்சியை கைப்பற்றிய பின்னர், எங்கள் மந்திரிகளுக்கு தெளிவான அறிவுரை வழங்கப் பட்டது. அதாவது மந்திரிகளில் யாராவது ஒருவர் 15 நாட்களுக்கு ஒரு முறை வட-கிழக்கு மாநிலங்களுக்கு செல்லவேண்டும். செல்வது என்றால் காலையில் சென்று விட்டு மாலை டெல்லி திரும்புவது அல்ல. எங்கள் மந்திரிகள் அங்கேயே தங்கி மக்களின்குறைகளை கேட்டறிந்தனர்.

சென்ற ஆண்டு மேகாலயாவில் வடழக்கு கவுன்சில் கூட்டத்தை தொடங்கிவைத்தேன். மேகாலாயாவில் சுற்றுலா மேம்பாட்டுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை மிகச் சிறந்த சுற்றுலா தளமாக உருவாக்க வேண்டும். வடகிழக்கு பிராந்தியத்தில் 47 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 15 புதிய ரெயில்தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...