துப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில்

உத்தரப் பிரதேச மாநில போலீஸார் கடந்தவாரத்தில் 18 என்கவுண்ட்டர்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில் அளித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஆனால், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறோம் – யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தவாரம் இருநாட்களில் போலீஸார் 18 என்கவுண்ட்டர் நடத்தினர், 25 குற்றவாளிகளை கைதுசெய்தனர். இந்த என்கவுண்ட்டர் நடத்தியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி ஆளும் பாஜக அரசிடம் விளக்கம்கேட்டு இருக்கிறது. போலீஸாரும், குற்றவாளிகளை கைது செய்ய போகையில் தற்காப்புக்காகவே சுட்டோம் என்று ஊடகத்தினரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து லக்னோவில்  நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்,

மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஆனால், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறோம் அவர்கள் துப்பாக்கிமீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்ததால், அவர்களுக்கு துப்பாக்கியால் பதில் அளித்தோம். இதைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று அனைத்து உயர் அதிகாரிகளிடம் நான் தெரிவித்துவிட்டேன் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.