தொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்?

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் பெற்றுள்ள வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கள்  என்றுதான் கூறவேண்டும். அதாவது திரிபுராவில் 2013ஆம் ஆண்டு வெறும் 1.5% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிடாத பாஜக இன்று 43% வாக்குகளுடன், 35 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நாகலாந்தில் 1.75% வாக்குவங்கியுடன் இருந்த பாஜக இன்று 14.4% வாக்குவங்கியுடன் 12 தொகுதிகளில் வென்று  தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் (17 தொகுதி) கூட்டணி அமைத்து  மொத்தம் 29 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கிறது.

மேகாலயாவிலும் 1.27% வாக்குவங்கியுடன் இருந்த பாஜக இன்று 9% வாக்குவங்கியுடன் 2 தொகுதிகளில் வென்று கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சியுடன்  கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளது.  

இதில் முறையே 75%, 90%  கிறிஸ்த்தவ வாக்காளர்களை கொண்ட மேகாலயாவும், நாகலாந்தும், 25ந்து வருடமாக கம்யூனிஸ்ட்களின் பிடியில் இருந்த திரிபுராவும் பாஜக.,வை ஆதரித்துள்ளன. இந்த வெற்றி பாஜக சிறுபான்மையினரின் மனதையும் வென்றுள்ளது, கம்யூனிசம் போன்ற மாற்று சித்தாந்தத்தையும் வேரருத்துள்ளது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மேலும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் மீது பலதரப்பட்ட மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நம்பிக்கையையும் இது காட்டுகிறது. இந்த நம்பிக்கை சாதாரணமாகவும் வந்துவிட வில்லை. அனுபவபூர்வமாகவே அவர்கள் பெற்றது.

2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற உடனேயே வடகிழக்கு கொள்கையை வகுத்தார். ரயில்வே, சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும்  இந்த பிராந்தியதுடன்  இணைக்கப்பட வேண்டும் என்று திட்டம் வகுத்தார்.

அகல ரயில்பாதை திட்டத்தின் மூலம் திரிபுராவை நாட்டின் பல பகுதிகளுடன் இணைத்தார் கிட்டத்தட்ட 900கிலோ மீட்டர் தூரம் அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டுள்ளது. ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய நகரங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே வரைப்படத்தில் அனைத்து பகுதிகளையும் இடம் பெறச்செய்வது இலக்காக கொள்ளப் பட்டுள்ளது. 

போக்குவரத்தை விஸ்தரிப்பதன் மூலமே வடகிழக்கு பிராந்தியத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற கொள்கையுடன். கடந்த மூன்று வருடத்தில் மட்டும் 3800கிமீ., நீள தேசிய நெடுஞ்சாலையை அமைக்க 34000 கோடி ஒதுக்கப்பட்டு அதில் 1200 கிமீ நீள சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த 60000 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இதேபோன்று விமான போக்குவரத்தை விஸ்தரிக்க 3200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மிசோராமில் மின் தேவையை பூர்த்தி செய்ய 60 மெகாவாட் திறனுடைய நீர் மின் திட்டத்தை நரேந்திர மோடி சென்ற வருடம்தான் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் மின் மிகை மாநிலமாக  திரிபுரா, நாகலாந் வரிசையில் மிசோராமும் இடம் பிடித்தது. இது வருடத்துக்கு 251 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

வடகிழக்கு மாநிலங்களை ஆசியான் நாடுகளுடன் இணைக்கும் முகமாக 1300கி.மீ நீளமுடைய இந்தியா, மியான்மர், தாய்லாந்து வழியாக மிகப்பெரிய சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது 2020ம் ஆண்டு நிறைவு பெரும்.  இது வடகிழக்கு மாநிலங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுத்தரும்.

எனவே வடகிழக்கில் பாஜக பெற்றுவரும் வெற்றியானது மக்கள் மீது மோடி கொண்ட உண்மையான நேச திட்டங்களின் வெளிப்பாடு. இதற்கு முன்பு மற்ற மாநிலங்களுடனே சரியான தொடர்பு இல்லாமல் இருந்த மாநிலங்கள். இன்று ஆசியான் நாடுகளுடனே தொடர்பை ஏற்ப்படுத்த போகிறது. இப்படி இருக்க தொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்?.

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...