பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்களை எம்.பி.க்களை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதில் உத்தரப்பிரதேசம் – 10, மகாராஷ்டிரா மற்றும் பீகார் தலா 6, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகம் தலா 4, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசா தலா 3, ஜார்கண்ட் – 2, சத்தீஸ்கர், அரியானா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தலா 1 என மொத்தம் 58 எம்.பி.க்கள் இடங்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது.
இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், பா.ஜ.க. சார்பில் அருண் ஜெட்லி, அனில் ஜெயின், நரசிம்ம ராவ், விஜய் பால் தோமர், கந்தா கர்தாம், அஷோக் பாஜ்பாய், ஹர்நாத் யாதவ், சகல்தீப் ராஜ்பர், அனில் அகர்வால் உள்பட 9 பேர் வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி சார்பில் ஜெயா பச்சன் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், கர்நாடகம் மாநிலத்தில் காங்கிரஸ்சார்பில் 3 பேரும், பா.ஜ.க. ஒரு இடத்திலும் வென்றுள்ளது. தெலுங் கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரீயசமிதி சார்பில் 3 பேரும் வெற்றி பெற்றனர். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒருஇடத்திலும் வென்றுள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக.வை சேர்ந்த சரோஜ்பாண்டே வெற்றி பெற்றுள்ளார். ஜார்க்கண்டில் பாஜக.வும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஒரு இடமும் வென்றுள்ளது. கேரளாவில் வீரேந்திர குமார் ஒருஇடத்தில் வென்றுள்ளார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.