அவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்

மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது, அச்சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லிமுதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் 3 பேர் குற்றம்சாட்டினர். இதனால் அவர்கள் மீது டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அருண் ஜெட்லி அவதூறு வழக்குதொடர்ந்தார். ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தவழக்கில் கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் நேற்று அருண் ஜெட்லியிடம் மன்னிப்புகேட்டனர். தனிநபர்கள் கொடுத்த தகவல்கள் தவறானவை என்று தெரிந்து கொண்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் மன்னிப்பு கடிதத்தில் கூறி இருந்தனர்.

அதை அருண்ஜெட்லியும் ஏற்றுக்கொண்டார். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அவரும், கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் கோர்ட்டில் கூட்டுமனு தாக்கல் செய்தனர். அம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என்று மாஜிஸ்திரேட்டு சமர்விஷால் தெரிவித்தார். கெஜ்ரிவால் ஏற்கனவே மத்திய மந்திரி நிதின் கட்காரி, பஞ்சாப் மந்திரி மஜிதா ஆகியோரிடமும் மன்னிப்புகேட்டுள்ளார்.

ஆனால், அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ஆம் ஆத்மி அதிருப்தி தலைவர் குமார் விஸ்வாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...