நாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு உட்படுத்த முடியாது

நாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்திருந்தன.

இதனை வெங்கைய்யா நாயுடு நிராகரித்ததையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதில்அளிக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ள அருண்ஜெட்லி, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை நீதிமன்றம் ஆய்வு செய்யமுடியாது என அதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் தன்னளவில் உச்சபட்ச அமைப்பு எனக்குறிப்பிட்டுள்ள அருண் ஜெட்லி, இதில் கேள்விக்கே இடமில்லை என கூறியுள்ளார்.

இதேபோல், மாநிலங்களவைத் தலைவரின் முடிவுகளையோ, மக்களவை சபாநாயகரின் முடிவுகளையோ நீதிமன்றம் கேள்விகேட்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, தற்கொலையை நோக்கிச்செல்வதைப் போல் உள்ளது என அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...