4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களால், கடந்த 4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்று 4 ஆண்டுகளை நிறைவுசெய்து வெற்றிகரமாக 5ம் ஆண்டிற்கு முன்னேறியுள்ளது. இதற்காக, பாஜக சார்பில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, டில்லியில் பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 4ம் ஆண்டின் நிறைவையொட்டி, கட்சி " தூய்மையான எண்ணங்கள், சரியானவளர்ச்சி " எனும் புதிய தாரகமந்திரத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட உள்ளதாக அமித் ஷா கூறினார்.
 

4 ஆண்டுகளில் ( 48 மாதங்கள்) இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிக்கையை வெளியிட்டார். அதில் தெரிவித்துள்ளதாவது, 2014ம் ஆண்டில் 38 சதவீத அளவில் இருந்த சுகாதார வசதிகள், தற்போது 83 சதவீதமாக அதிகரித்துள்ளது.7 கோடிக்கும் மேற்பட்ட புதியகழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

31.52 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் வங்கி கணக்குகளால், 5.22 கோடி குடும்பங்கள், ஆண்டிற்கு ரூ. 330 என்ற வீதத்தில் குடும்பம் முழு வதிற்குமான ஆயுள்காப்பீட்டு வசதியை பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...