அவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு

தமிழிசை சவுந்தர ராஜன் குறித்து அவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குறித்து பெண் ஒருவர் அவதூறாக பேசும்வீடியோ காட்சிகள், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்தப்பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநில செயலாளர் அனு சந்திரமவுலி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை நேரில்சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், அவதூறாக பேசிய அந்த பெண்ணின் பெயர் சூர்யா என்பது தெரியவந்தது. அவர்மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்தப்பெண் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இதேவிவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி தலைவி மகாலட்சுமியும் நேற்று புகார் மனு கொடுத்துள்ளார். டிஜிபியிடம் கொடுக்கப்பட்ட புகாரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இரு புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும் போது, ‘‘தமிழிசை குறித்து அந்தப் பெண்ணின் வீடியோ ஒருநிமிடம் 10 விநாடிகள் ஓடுகிறது. அந்தப்பெண்ணே செல்பி வீடியோவாக எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை வைத்துதான் தற்போது விசாரணை நடந்துவருகிறது. முகநூலில் அந்தப் பெண்ணின் பெயர் சூர்யா ஆரோ என்று பதிவிடப் பட்டுள்ளது. ஆனால், மற்றொரு இடத்தில் அதேபெண் பர்தா அணிந்து நிற்பது போன்றும், 2 இளைஞர்களுடன் அமர்ந்து இருப்பது போன்றும் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அந்தப்பெண் சென்னையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.

விரைவில் அவரைப்பிடித்து விடுவோம். வழக்குப் பதிவு, கைது செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...