எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க. இழந்து நிற்கின்றது

சட்ட சபையில் ஆளும் கட்சிக்கு எதிராக  தெளிவாக விவாதிக்க வேண்டிய எதிர்க் கட்சி, தனது பொறுப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்ட சபையை புறக்கணித் திருக்கின்றார்களோ என்று மிகப்பெரிய சந்தேகம் கிளப்பியிருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இதுதொடர்பாக மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த இரண்டு நாள்களாக தமிழக சட்ட சபையில் நடந்துவரும் கேலிக்கூத்தை பார்க்கும் போது, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இழந்து நிற்கின்றது. தமிழக சட்டசபையில் மிக முக்கியமான பிரச்சனை குறித்து விவாதங்கள் நடந்துவருகின்றன.

இந்தவேளையில் அந்த பிரச்னைகள் குறித்து சட்டசபையில் ஆளும் கட்சிக்கு எதிராக தெளிவாக விவாதிக்க வேண்டியது எதிர்க் கட்சியின் பொறுப்பு. ஆனால் எதிர்கட்சி தனது பொறுப்பில் இருந்துவிலகி, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்டசபையை புறக்கணித் திருக்கின்றார்களோ என்ற மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் தவறிழைத்தில் சமஅளவு பங்கு கொண்டுள்ளன. இந்த காரணத்தினால் சட்ட சபை விவாதங்கள் மூலமாக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிக்கிறார்கள் என்ற சந்தேகம் மக்கள்மனதில் மேலோங்கி நிற்கின்றது. அதற்கு இந்தமூன்று கட்சிகளும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...