புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்

பிரதமர்  நரேந்திர மோடி, கலிபோர் னியாவில் நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலிகாட்சி மூலம் பேசினார். இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''வெளிநாடுவாழ் இந்தியர்கள் எப்போதும் இந்தியாவை பெருமைப்படுத்தி வருகிறார்கள். இந்திய பாஸ்போர்ட்டுக்கு உலகம் முழுவதும் காணப்படும்  மதிப்பைவைத்து அவர்களது முயற்சிகளை எடைபோடலாம். தூய்மை இந்தியா போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து குடும்பத்தின ரையாவது இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். இது ஒரேபாரதம், சிறந்தபாரதம் இயக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்ற புதியவழியை ஏற்படுத்தும்.

இதன் மூலம் இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம்கிடைக்கும். மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்களிக்கலாம். வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி முதல் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டங்கள் இந்தியாவில் தொடங்கும். இந்தியாவின் இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரில் பிரம்மாண்டமான  ஒற்றுமை சிலை  நர்மதை நதியில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி அந்தப் பணிகள் நிறைவடையும். பணிகள் நிறைவடைந்ததும் உலகின் மிக உயரமான சிலையாக அது இருக்கும்.

இந்தியா தற்போது உலகின் ஒளிரும் நட்சத்திரமாக காணப் படுகிறது. இந்தியா தற்போது விரைவான பொருளாதார வளர்ச்சி, நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. ஜி.எஸ்.டி, ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை போன்ற முன்முயற்சிகள் மக்கள் நேர்மையுடன் தொழில் நடத்துவதற்கு உதவி உள்ளது. இந்த முன்முயற்சிகள் காரணமாக எளிதாக தொழில்புரியும் நாடுகளின் கடந்த நான்காண்டு பட்டியலில் இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது. எனவே,புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க வெளிநாடுவாழ் இந்திய சமுதாயத்தினர் பாடுபடவேண்டும்''  என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...