வாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பீல் புதிய திட்டங்கள்

இருநாள் பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசிவந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பழைய காசி நகரத்துக்கு ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுதிட்டம் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் புதிய கண் மருத்துவமனை, பச்சிளம் குழந்தைகளை கதகதப்பாக வைக்கும் ‘இன்கு பேட்டர்’ அறை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, வாரணாசி நகரம் கடந்த நான்காண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை தெளிவாக காணமுடிவதாக குறிப்பிட்டார்.


இதேபோல், பழம் பெருமை வாய்ந்த காசி நகரத்தை அதன் பாரம்பரிய சிறப்பு மாறாமல் நவீனப் படுத்த வேண்டும் என்பது நமது குறிக்கோளாகும். கடந்த நான்காண்டுகளில் அந்ததிட்டமும் நிறைவேறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்ற பிறகு இந்தபணிகள் எல்லாம் வேகம் கண்டுள்ளன. வாரணாசி நகரின் மேலே செல்லும் மின்கம்பிகள் எல்லாம் மாற்றப்பட்டு தரைக்கு அடியில் செல்லும் கேபிள்களாக மாற்றப் பட்டிருக்கிறது. கங்கோத்ரியில் இருந்து கங்காசாகர் வரை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

விஸ்வநாதர் மற்றும் கங்கைத்தாயின் ஆசிகளுடன் இன்னும் ஓராண்டு நாட்டுக்காக பணி யாற்றும் வாய்ப்பு எனக்கு மிச்சம் உள்ளது. இவற்றுடன் நாட்டு மக்களான உங்களது அன்பும், வாழ்த்துகளும் இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பணியாற்றும் உத்வேகத்தை எனக்கு அளித்துவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...