தசரா தேசமெங்கும் சோகத்தினை வரவழைத்த ரயில்விபத்து

அமிர்தசரஸ் ரயில்விபத்து :  தசரா விழா இந்தியா முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ்ஸில் கொண்டாடப்பட்ட தசரா தேசமெங்கும் சோகத்தினை வரவழைத் திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இருக்கும் ஜோரா பதாக் என்ற பகுதியில் ராவணவதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது வான வேடிக்கைக்காக பட்டாசுகள் வாங்கி கொளுத்தியபோது, பட்டாசுகள் தாறுமாறாக வெடிக்கத் தொடங்கியது.

சிறுகாயங்களுக்கு பயந்து அங்குமிங்கும் மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அருகில் இருக்கும் தண்டவாளம் வழியே சிலர் ஓட முயன்றபோது, அந்த வழியே வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த கூட்டத்தில் மோதியது.

 

இந்த கோர விபத்தினால் 60க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த கோரநிகழ்விற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகுறித்து டில்லியில் விளக்கம் அளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், ரயில் தண்டவாளத்தில் மக்கள் கூடிநிற்பது விதிமீறல் ஆகும். ரயில்பாதையை ஒட்டிய பகுதியில் நிகழ்ச்சி நடத்துவதற்காக எந்த அனுமதியும் பெறப்பட வில்லை.

ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறப் படாததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாததும் தான் இந்த விபத்திற்கு காரணம். இந்தவிபத்தில் ரயில்வேயின் தவறு ஏதுமில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

 தசரா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இடம்பெற்ற நாடகத்தில், வழக்கமாக ராவணன் வேடமிடும் தல்பிர்சிங் என்பவரும் உயிரிழந்தார். 
நாடகம் முடிந்த பின்னர் ராவணன் உருவபொம்மை எரிக்கப் படுவதையும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளையும் பார்க்க தல்பிர் சிங்கும் அருகில் சென்றார். மக்கள் கூடியிருந்த இடத்தை நோக்கி ரயில் அதிவேகமாக வருவதைபார்த்த தல்பிர்சிங், எச்சரிக்கை மணியை ஒலிக்க முயற்சி செய்தார். அதற்குள் ரயில்மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...