பீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது

பீஹாரில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க ப்பட்டுள்ளது.

வரப்போகும் 2019-ம் லோக்சபா தேர்தலில் பீஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சி 50:50 என்ற முறையில் தொகுதி ஒதுக்கீடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்றொரு கூட்டணி கட்சியான ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து தொகுதிபங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவுசெய்யப்பட்டு நாளை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி ஆறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தது அந்த கட்சி அதே அதே எண்ணிக்கையிலான தொகுதியை எதிர்பார்த்தது.

இந்நிலையில் பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் 17 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதி 6 தொகுதிகளில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்குவாய்ப்பு தருவது என்றும் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பீகாரில் மொத்தம் 40 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் தலித் மக்களிடையே லோக் ஜனசக்திக்கு அதிக செல்வாக்கு உள்ளது. நிதீஷ் குமாருக்கும் மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.பாரதிய ஜனதாவும் 25 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது.எனவே பாஜக கூட்டணி சென்ற முறை கைப்பற்றிய தொகுதிகளை விட கூடுதலான எண்ணிக்கையில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...