இந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்

சபரிமலை விவகாரத்தில் கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசின் செயல்கள் வெட்கக்கேடானவை. இதுவரை எந்த அரசும், எந்த கட்சியும் செய்யாத செயல்களை சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசு செய்துவிட்டது. இது வெட்கக்கேடான செயல். இந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்கமாட்டார்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு வெறுப்புணர்வை காட்டுவார்கள் என்று யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள்.

சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது. கேரளத்தை ஆட்சிசெய்த ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி கூட்டணி அரசுகள், மாநிலத்தை இனக்கலவரம் மற்றும் ஊழலுக்கான இடமாக மாற்றியுள்ளன. சபரிமலைவிவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு மாதிரியாகவும், கேரளத்தில் ஒருமாதிரியாகவும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கருத்துதெரிவித்து வருகிறது.

சபரிமலை விவகாரத்தில் கொண்டுள்ள இரட்டை நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் உள்ள கட்சிகளும் விளக்க மளிக்க வேண்டும் என்று சவால்விடுகிறேன். சபரிமலை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரியாக தான் உள்ளது. கட்சியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எந்தவேற்றுமையும் இருக்காது. கேரளத்தின் கலாசாரத்தை காப்பாற்ற நினைக்கும் ஒரேகட்சி பாஜகதான்.

காங்கிரஸும், இடதுசாரி கூட்டணி அரசும் பாலினநீதி குறித்து பேசுகிறார்கள். ஆனால் அவர்களது செயல் வேறு மாதிரியாக உள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி என்று வேறுவேறு பெயரில் கட்சி வைத்துள்ளார்களே தவிர கேரளத்தின் கலாசாரத்தை அழிப்பதில் ஒரேமாதிரிதான் செயல்படுகிறார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அவர்கள் இருவரும்.

முத்தலாக் முறை முஸ்லிம் இன பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி. பல இஸ்லாமிய நாடுகளில் அந்தமுறைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. வாக்குவங்கி அரசியலுக்காகதான், கம்யூனிஸ்டும், காங்கிரஸும் இதற்கு ஆதரவளிக்கின்றன. பொருளா தாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஐக்கியஜனநாயக முன்னணியில் இருக்கும் இந்திய முஸ்லிம் லீக் யூனியன் கட்சி எதிர்ப்புதெரிவித்து வருகிறது. எந்த சமூகம், இனத்தில் பிறந்திருந்தாலும் அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சமூக நீதிக்காக நாங்கள் உழைக்கிறோம். ஆனால் ஐக்கிய ஜனநாயக முன்னணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

தற்போதைய நிலைமையில் பாஜகவை நினைத்து அவர்கள் சிரிக்கலாம். ஆனால் எனக்கு பாஜக தொண்டர்கள்மீது நம்பிக்கை உள்ளது. திரிபுராவில் கம்யூனிஸ்டை வீழ்த்தி வெற்றி பெற்றவாறு, கேரளத்திலும் நாங்கள் வெற்றிபெறுவோம். வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர்மோடி செவ்வாய்க் கிழமை கேரள மாநிலத்துக்கு சென்றிருந்தார். கொல்லம் நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியபிறகு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...