எங்கு உண்மை, தர்மம், ஒழுக்கம் ஆகியன உள்ளதோ அங்கு வெற்றியும் எளிதாக கிட்டும்

தர்மம், ஒழுக்கம் இருக்கும் இடத்தில் வெற்றி எளிதில் வந்துசேரும் என  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

திருச்சி சாதனா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட காரியால யத்தின் திறப்பு விழா அண்மையில் நடை பெற்றது. இந்த விழாவில், காரியாலயத்தை திறந்துவைத்தும்,  பாரதமாதாவின் திரு உருவப்படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தியும் மோகன் பாகவத் பேசியது: சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி நல்ல மனிதர்களை உருவாக்கவேண்டும்.  எங்கு உண்மை, தர்மம், ஒழுக்கம் ஆகியன உள்ளதோ அங்கு வெற்றியும் எளிதாக கிட்டும். சுயநலம் இல்லாமல் தூய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.  சாதனா காரியாலயம் சமுதாய மாற்றத்திற்கான கருவியாக அமையவேண்டும்.

உண்மை,தூய்மை,தவம் ஆகியன இருந்தால் சக்திபெருகும்.அந்த சக்தியை கொண்டு அன்புபாராட்டி மாற்றத்தை உருவாக்கிட வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக அவர், விஸ்வஸம்வாத் கேந்திரம்-தென் தமிழகம் என்ற  இணையதளத்தை தொடக்கி வைத்தார். முன்னதாக விழாவுக்கு மேல்கோட்டை ஜீயர் சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள்,கோவை காமாட்சிபுரி ஆதீனம், ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலாளர் சத்யானந்த மகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சாதனா அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜேந்திரன்ஜி வரவேற்று பேசினார்.இவ்விழாவில் சிட்டிசன் பார் உய்யக்கொண்டான் என்ற அமைப்பின் மனோஜ் தர்மர், ரங்கராஜ் தேசிய அறக்கட்டளையின் ரவீந்தர்குமார்,ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்வயம் சேவகர் மாரிச்சாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  நிறைவாக சாதனா அறக்கட்டளையின் தலைவர் அரங்கவரதராஜன் நன்றி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...