குடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநில அரசு முறையாக நடவடிக்கை எடுத்துவருவதாக பாஜகட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் தெரிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுசெயலாளர், முரளிதரராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தேசிய ஐனநாயக கூட்டணி, இந்தியாவில் மிகப் பெரிய, வலுவான கூட்டணியாக உள்ளது.கூட்டணி தொடர்பாக கேரளாவில் இடது சாரிகளும், காங்கிரசும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தியாவில் மற்றகூட்டணி கட்சிகளுக்கு தலைவர் இல்லை. இந்திய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே மோடி தலைவராக உள்ளாா். வருகிற 23, 24 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாமுழுவதும் உள்ள பாஜக வேட்பாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள் என கூறிய அவர், தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் வேட்பாளர்களின் பெயர்கள் வருகிற நான்கு, ஐந்து தினங்களில் இறுதிசெய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதி மட்டுமில்லாது அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் பிரசாரம்செய்வார்கள். குடும்ப, சாதி அரசியலுக்கு பாஜக எதிரானவர்கள்.

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளிவைக்க கேட்டுகொண்டு உள்ளதாகவும், தேர்தல் ஆணையம்தான் இதற்கு முடிவுசெய்ய வேண்டும் என கூறினார்.

பிரதமராக, மோடிதான் அதிகளவில் தமிழகத்திற்கு வந்துள்ளாா். பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு இதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவலியுறுத்தி உள்ளோம்.

அதிமுகவினர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து கொண்டு இருப்பதாகவும், தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார். பாஜக அமைத்துள்ள கூட்டணியில் உள்ள அதிமுக நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒருகுடும்பத்திற்கு உள்ளேயே வேறு வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருப்பார்கள் அதே போலதான் கூட்டணி கட்சிகளும் என தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...