நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் தேர்தல் வாக்குறுதி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல்வாக்குறுதிகள் நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்கிழமை அவர் அளித்த பேட்டி: இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்பாடுகளில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். தேசத்துக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் தியாகத்தை அவர்கள் கொச்சைப்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், சுமார் 70 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், மக்கள் நலப் பணிகளில் அக்கறை செலுத்தியிருந்தால், இந்த வாக்குறுதிகளுக்கான தேவை இப்போது எழுந்திருக்காதே? ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை வாபஸ்பெறவுள்ளதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலத்தை குறைப்போம் என அக்கட்சி மறைமுகமாக அறிவித்துள்ளது.

பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், தேசத்துரோகச் சட்டத்தை நீக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவைத் துண்டாட நினைப்பவர்களின் குரலாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உள்ளது. பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகள், இந்தியாவை துண்டாட நினைப்பவர்கள், பாகிஸ்தான் பிரதமர் ஆகியோரின் பாஷையில் காங்கிரஸ்கட்சி பேசுவது துரதிருஷ்டவசமானது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...