உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுபாதுகாப்பு அமைப்புடன் நடைபெற்றக் கூட்டத்தில் பசுப்பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருடைய பசு பாதுகாப்பு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இன்று, முதல்வர் யோகி ஆதித்யநாத், பசு பாதுகாப்பு அமைப்புடன்(Gau Sewa Aayog) ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது, ‘ஆவணங்களுடன் பசுக்களை எடுத்துச் செல்பவர்களுக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். சட்ட விரோதமாக பசுக்கடத்தலில் ஈடுபடுபவர்களைச் சேர்ந்த பசு பாதுகாப்பு அமைப்பு சோதனை செய்யவேண்டும். பசு முகாம்களில் பசு பாதுகாப்பு அமைப்பு அடிக்கடி சோதனை செய்யவேண்டும். பசுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. பசு முகாம்கள் பொருளாதார ரீதியாக சுயமாக செயல்பட வேண்டும்.
பசுவின் சிறுநீரும், சாணமும் உரமாக பாதுகாக்கப் பட வேண்டும். பின்னர், அது விற்பனை செய்யப்படும். மற்றபொருள்களும் விற்பனை செய்யப்படும். பசு பாதுகாப்பு அமைப்பு ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று, பசுமுகாம் எந்த நிலைமையில் உள்ளது.
மாட்டுக்கொட்டகை, எந்த பொருளால் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பசுக்களை வைத்திருக்கும் விவசாயிகளை, அதனை பொருளாதார ரீதியாக பயன்படுத்த வில்லையென்றால், ஒரு பசுமாட்டுக்கு உணவுக்கு 30 ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |