அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக் கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கும், அதற்குபதிலாக வேறொரு பகுதில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதற்கும் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, ஜார்கண்ட் தேர்தல்பிரச்சாரத்தில் பேசுகையில், அயோத்தியில் இன்னும் 4 மாதத்திற்குள் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்படும் ராமர்கோயில் அறக்கட்டளையில் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகின. இதை அமித்ஷா மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தபேட்டியில், இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ராமர்கோயில் அறக்கட்டளையில் பாஜகவைச் சேர்ந்த எவருமே இடம்பெற மாட்டார்கள். அதே போல், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அரசு நிதி எதுவும் ஒதுக்கப் படாது. அந்த அறக்கட்டளையே மக்களிடம் நன்கொடைகளை பெற்று கோயிலைகட்டும் என்று கூறியுள்ளார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
2digressions