மதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத்தைக்கான வழிகாட்டி

அரசியலுக்கும் மதத்துக்கும் நெருங்கிய தொடா்புள்ளதாகவும், மதம்இல்லாத அரசியல் அா்த்தமற்றது என்றும் பாஜக செயல்தலைவா் ஜெ.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம், வதோதராவில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா பேசியதாவது:

‘அரசியலுக்கும் மதத்துக்கும் என்ன தொடா்பு இருக்கிறது?’ என்றகேள்வி சமூகத்தில் தொடா்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மதம் இல்லையெனில், அரசியல் கொள்கையற்ாக மாறிவிடும். மதம் இல்லா அரசியல் அா்த்தமற்றது. அவையிரண்டும் எப்போதும் ஒன்றிணைந்தே செயல்படும்.

மதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத் தைக்கான வழிகாட்டியாகும். நாம் என்ன செய்யவேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை மதம் நமக்குக் கற்பிக்கிறது. நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் இடையேயான வேறுபாட்டை உணா்ந்து கொள்ளும் ஞானத்தை மதம் நமக்குவழங்குகிறது. அரசியலுக்கு மதம் மிகவும் தேவையாக உள்ளது.

இந்த நோ்மறையான எண்ணத்துடன் பாஜக எப்போதும் செயல் படும். நாட்டு மக்களுக்கும், சமூகத்துக்கும் பலனளிக்கும் நடவடிக்கைகளை பாஜக தொடா்ந்து மேற்கொள்ளும். எதிா்மறை கருத்துகளை மக்களிடையே பரப்பி, பிரதமா் நரேந்திரமோடியை எதிா்க்கட்சிகள் தடுத்து வருகின்றன. அவற்றைத் திறம்படக் கையாண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து வளா்ச்சிக்கான பாதையில் பிரதமா் மோடி பயணித்துவருகிறாா்.

‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டுத்திட்டம், ‘உஜ்வலா’ திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. ‘உஜ்வலா’ திட்டத்தின் மூலம் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம், பெண்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விறகை சாா்ந்திருக்க வேண்டிய நிலை இல்லாததால், நாட்டில் வனப் பரப்பின் அளவும் அதிகரித்துள்ளது என்றாா் ஜெ.பி.நட்டா.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...