குடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல

பாஜக பூத்நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் குடியுரிமைத் திருத்தச்சட்ட விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தி, கலவரத்தை தூண்டுகின்றனர்.

சிறுபான்மையினருக்கு நான் ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன். குடியுரிமை சட்டத்தால், உங்களின் குடியுரிமை பறிபோகாது.

அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கண்களைத் திறந்து பாருங்கள். பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதஸ்தலமான நன்கானா சாகிப் கடந்த இரு நாட்களுக்கு முன் எவ்வாறு தாக்கப்பட்டது என்பதை பாருங்கள். குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருபவர்களுக்கு அங்கு நடந்த சம்பவமே பதிலாகும். தவறான செய்திகளை எதிர்க் கட்சிகள் பரப்புகின்றன. ஓட்டு வங்கிக்காக இதனை காங்கிரஸ் செய்கிறது. குடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த போது, 15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று வாக்குறுதிஅளித்தது. இப்போதுவரை அந்த கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. டெல்லிக்கு என்ன செய்தீர்கள் என்பதை கெஜ்ரிவாலிடம் மக்கள் கேட்கவேண்டும்.

டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...