பிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ. 1.70 லட்சம் கோடி நிதி

பிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ. 1.70 லட்சம் கோடி நிதித் திட்டத்தில் பெண்கள், ஏழைகள், மூத்தகுடிமக்கள் விவசாயிகள் ஆகியோர் இலவச உணவுப் பொருள் மற்றும் நேரடிரொக்கம் என்று திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிதியுதவித் திட்டத்தை விரைவுகதியில் அமல் படுத்தி அதனை மாநில, மத்திய அரசு கண்காணித்து வருகிறது அரசு.

42 கோடி ஏழை மக்கள் ரூ.53,248 கோடிவரை உதவி பெற்றுளனர்.

பிரதமர் கிசான்திட்டத்தின் முதல் தவணையாக 8.19 கோடி பயனாளிகளுக்காக ரூ. 16,394 கோடி ரூபாய் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் 20.05 கோடி பெண்களுக்கு ரூ.10,029 கோடி தொகை முதல் தவணையாக ஜன்தன் கணக்குகளில் செலுத்தப் பட்டுள்ளது.

ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20.62 கோடி பெண்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10,315 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

அதே போல் 2.81 கோடி முதியோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,814.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

2.3 கோடி கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,312 கோடி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவுதானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் 65.85 கோடி பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.

ஜூன் 2020-ல் 7.16 மக்களிடையே 3.58 லட்சம் மெட்ரிக்டன்கள் உணவு தானியங்கள் சென்றடைந்துள்ளன. 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்பு மாநிலங்களுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப பட்டுள்ளன. பிரதமர் நலத் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 9.25 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புக்செய்யப்பட்டு 8.58 கோடி இலவச சிலிண்டர்கள் விநியோகிக்க பட்டுள்ளன.

இபிஎஃப்ஓ உறுப்பினர்களில் 16.1 லட்சம் பேர் திருப்பிச் செலுத்த வேண்டியதல்லாத முன் தொகையாக ரூ.4,725 கோடி ஆன் லைன் மூலம் எடுத்துள்ளனர். ரூ.28,729 கோடி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் பங்களிப்பில் 24% தொகை 59.23 லட்சம் ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் தொகை ரூ.895.09 கோடி.

இவ்வாறு நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...