பிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ. 1.70 லட்சம் கோடி நிதி

பிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ. 1.70 லட்சம் கோடி நிதித் திட்டத்தில் பெண்கள், ஏழைகள், மூத்தகுடிமக்கள் விவசாயிகள் ஆகியோர் இலவச உணவுப் பொருள் மற்றும் நேரடிரொக்கம் என்று திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிதியுதவித் திட்டத்தை விரைவுகதியில் அமல் படுத்தி அதனை மாநில, மத்திய அரசு கண்காணித்து வருகிறது அரசு.

42 கோடி ஏழை மக்கள் ரூ.53,248 கோடிவரை உதவி பெற்றுளனர்.

பிரதமர் கிசான்திட்டத்தின் முதல் தவணையாக 8.19 கோடி பயனாளிகளுக்காக ரூ. 16,394 கோடி ரூபாய் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் 20.05 கோடி பெண்களுக்கு ரூ.10,029 கோடி தொகை முதல் தவணையாக ஜன்தன் கணக்குகளில் செலுத்தப் பட்டுள்ளது.

ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20.62 கோடி பெண்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.10,315 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

அதே போல் 2.81 கோடி முதியோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,814.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

2.3 கோடி கட்டட மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.4,312 கோடி உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 101 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவுதானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் 65.85 கோடி பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.

ஜூன் 2020-ல் 7.16 மக்களிடையே 3.58 லட்சம் மெட்ரிக்டன்கள் உணவு தானியங்கள் சென்றடைந்துள்ளன. 5.06 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்பு மாநிலங்களுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்ப பட்டுள்ளன. பிரதமர் நலத் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 9.25 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புக்செய்யப்பட்டு 8.58 கோடி இலவச சிலிண்டர்கள் விநியோகிக்க பட்டுள்ளன.

இபிஎஃப்ஓ உறுப்பினர்களில் 16.1 லட்சம் பேர் திருப்பிச் செலுத்த வேண்டியதல்லாத முன் தொகையாக ரூ.4,725 கோடி ஆன் லைன் மூலம் எடுத்துள்ளனர். ரூ.28,729 கோடி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் பங்களிப்பில் 24% தொகை 59.23 லட்சம் ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் தொகை ரூ.895.09 கோடி.

இவ்வாறு நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...