நான் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டால் ஆசீர்வதிக்கப்

பாபர் மசூதி இடிப்புவழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள பாஜக தலைவர்களுள் ஒருவரான உமாபாரதி, ஒருவேளை நான் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டால், நான் ஆசீர்வதிக்கப் பட்டவளாக இருக்கிறேன் என அர்த்தம் என அதிரடியாக பேசியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பாபர்மசூதி இடிப்பு வழக்கில் தனது தரப்பு வாதத்தினை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ இணைப்புவாயிலாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கிலிருந்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்பளித்திருந்தது. பின்னர் இந்ததீர்ப்பினை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் போக்கை மாற்றி, விடுதலை செய்யப் பட்டவர்களுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லையெனக் கூறி மீண்டும் வழக்கை உயிர்பித்தது. இந்த வழக்கை மறுவிசாரணையாக தினந்தோறும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றம் இந்தவழக்கின் தீர்ப்பினை ஆகஸ்ட் 31 க்குள் வழங்க வேண்டும்.ஆகையால் இந்த வழக்கு விரைவாக நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், “ராமர் கோயிலைக் கட்டினால் கொரோனா போய் விடும் என சிலர் கருதுகின்றனர்.” என்று விமர்சனம் செய்திருந்தார்.இது குறித்து உமாபாரதி கருத்து தெரிவிக்கயைில் “இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஒருமுழு அமைப்பும் கொரோனா உடன் போராடுகிறார்கள். சுகாதார அமைப்பு தனி, கோயிலை கட்டியெழுப்பும் அமைப்புதனி. சரத்பவாரின் கருத்துகளில் நான்வேறு அர்த்தத்தைக் காண்கிறேன். சிலர் இவை அனைத்தும் அதிகபிரச்சனை இல்லாமல் நடக்கிறது என்று கவலைப்படுகிறார்கள். மோடி-ஜி அயோத்தியில் இருக்கும் போது ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ பாடுமாறு பவார்-ஜியை நான் கேட்க விரும்புகிறேன்.” என உமாபாரதி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...