அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய, காலை உணவு புதிய கல்விக் கொள்கை

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவோடு, காலை உணவும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை புதிய கல்வி கொள்கைக்கு ஜூலை 29-ம் தேதி ஒப்புதல்அளித்தது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமானது மாணவர்களுக்கு காலைநேர உணவு வழங்கும் திட்டமாகும்.

அதாவது மாணவர்கள் கல்வி கற்பதற்கு மதிய உணவு மட்டுமல்ல, காலை நேரத்தில் சத்தான உணவும் அவசியம். குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகவும், ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், சத்துள்ள காலை உணவுதேவை என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”குழந்தைகள் சத்து குறைபாட்டுடன் இருந்தாலோ அல்லது நல்ல உடல்நிலையில் இல்லாவிட்டாலோ அவர்களால் முழுமையாகக் கல்விகற்க முடியாது. ஆதலால், அவர்களுக்குரிய மனவளத்தையும் மற்றும் சுத்துள்ள உணவையும் வழங்க வேண்டும். பள்ளிமுறையில் சிறந்த பணியாளர்கள், கவுன்சிலர்கள் மூலம் சமூகத்துடன் ஈடுபாட்டை உருவாக்கலாம்.

காலையில் சத்தான உணவுக்குப்பின் மாணவர்கள் படிக்கும்போது ஆக்கபூர்வமாக செயல்பட முடியும், பாடங்களில் அதிகமான ஆர்வமும் ஏற்படும் என பல்வேறு மருத்துவஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், மதியஉணவு வழங்குவதோடு காலைநேரத்தில் மாணவர்களுக்கு எளிமையான சத்தான உணவும் வழங்கிடவேண்டும்.

காலை உணவு சூடாகத் தயாரிக்க முடியாத சூழலில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குக் காலைநேரத்தில் வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்றவற்றை வெல்லத்துடன் வேகவைத்து வழங்கலாம். உள்ளூரில் கிடைக்கும் பழவகைகளை வழங்கலாம்.

அனைத்துக் குழந்தைகளும் குறிப்பிட்டகால இடைவெளியில் முறைப்படி உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை தொடங்கி அதைப் பள்ளி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.

5 வயதுக்குமுன் உள்ள அனைத்துக் குழந்தைகளும் தயாரிப்பு வகுப்புக்கு (அங்கன்வாடி) உட்படுத்தவேண்டும். குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்குப் பாடங்களையும் எண்களையும் விளையாட்டின் மூலம் புரியும்வகையில் அடிப்படையில் இருந்தே கற்பித்தால் அவர்களின் அறிவாற்றல், திறன், உளவியல் வளர்ச்சி அடையும்.

தயாரிப்பு நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டமும் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்கும் குறிப்பிட்டகால இடைவெளியில் உடல்நல பரிசோதனை நடத்தப்பட வேண்டும்”.

இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தேசிய மதிய உணவுத்திட்டம் என்பது பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதியஉணவு இலவசமாக வழங்கும் திட்டமாகும். இதை மத்திய அரசின் நேரடி உதவியில் அரசு பள்ளிகளுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்பு பயிற்சிப்பள்ளிகள், மதரஸாக்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்தத்திட்டத்தில் குறைந்தபட்சம் நாடு முழுவதும் 11.59 கோடி குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர், இந்தத் திட்டத்தின் மூலம் 26 லட்சம்பேர் வேலை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அதாவது 14 வயது வரையில் உள்ள மாணவர்களுக்குப் பள்ளி நாட்களில் ஒருவேளை உணவு அதாவது மதியஉணவு வழங்குவது கட்டாயமாகும். சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களின் சூழலுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு பால், முட்டை, பழங்கள், பருப்புவகைகளை வழங்குகின்றன” எனத் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...