நவீன இந்தியாவின் புதிய துவக்கம்

நவீன இந்தியாவின் புதிய துவக்கம் இன்று தொடங்கியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றியதாவது, இந்த உலகமே ஒருகுடும்பத்தை சேர்ந்தது என்பதை நம் நாடு நம்புகிறது. பலர் பூமிபூஜை நிகழ்ச்சிக்கு வராமல் தியாகம் செய்துள்ளனர். அவர்களது உடல்மட்டுமே இங்கு இல்லை, ஆனால் அவர்களின் சிந்தனை எல்லாம் இங்குதான் உள்ளன. அத்வானியால் பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்குபெற முடியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியை அவர் தொலைக்காட்சி வாயிலாக கவனித்துக்கொண்டுதான் இருப்பார். இங்கு வருகை புரிந்துள்ளள ஒருசிலருக்கும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.

பூமி பூஜையால் நாடு முழுவதும் மகிழ்ச்சி அலை வீசிக் கொண்டு இருக்கிறது. நமது சுயமதிப்பை மதிப்பீடு செய்துகொள்ளும் அளவுக்கு தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. பூமி பூஜையால் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான அடித்தளம் இன்று அமைக்கப் பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் பேசியவர், நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தோம். ராமர் கோயிலுக்காக 20 முதல் 30 ஆண்டுகளுக்கு போராட வேண்டும் என அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலா சாகேப் தியோரஸ் எங்களிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. தற்போது 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோராட்டம் மகிழ்ச்சிகரமான முடிவுக்கு வந்து எங்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என மோகன் பாகவத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...