ஹதராபாத்தில் உள்ள தேசியபோலீஸ் அகாடமியில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4, 2020) பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரென் சிங் மூலம் உரையாடினார். அப்போது அவர், அவர்கள் தங்களின் வேலையையும், சீருடையையும் மதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள், தங்கள் சீருடையில் சக்தியை காண்பிப்பதற்கு பதிலாக அதனைநினைத்து பெருமைப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடி கூறினார்.
“உங்கள் காக்கி சீருடையை எப்போதும் மதிக்கவேண்டும். இந்த COVID-19 இன் போது காவல் துறையினர் செய்த அர்பணிப்புடன் கூடிய பணி என்றென்றூம் நினைவில் கொள்ளப்படும் என பிரதம மோடி கூறினார்.
தனது உரையின்போது, அகாடமியில் இருந்து வெளியேறிய இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவர்களை சந்திக்க முடியவில்லை என்றார்.
“ஆனால் எனது பதவிக்காலத்தில், நான் நிச்சயமாக உங்கள் அனைவரையும் ஒரு கட்டத்தில் சந்திப்பேன் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
ஐ.பி.எஸ். பணியில் தினம்தினம் புதிய புதிய சாவால்களை எதிர் கொள்ளும் நிலை உள்ளதால், அதிகளவு மன அழுத்தம் உள்ளது, அதனால்தான் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களுடன் தொடர்ந்துபேசுவது முக்கியம். மன அழுத்தத்தை போக்க யோகா மற்றும் பிராணாயாமம் பயிற்சியை மேற்கொள்ளவும். ”
பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “ஆரம்ப கட்டத்திலேயே இளைஞர்கள் தவறானபாதையில் செல்வதை நாம் தடுக்கவேண்டும், மேலும் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் பெண்கள் காவல் துறையினர் அதைச் சாதிக்க முடியும்” என்றும் கூறினார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |