நவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி

நவராத்திரியின் ஐந்தாம்  நாள் நாம் வழிபட வேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்தமாதா என்றும் அழைக்கப்படுகிறாள். இவளை வழிபடும் ஐந்தாவது நாளுக்கு உரியகுமாரி – சண்டிகா தேவி;

மந்திரம் – ஓம் சண்டிகாயை நம; சுவாசிநியின் பெயர் – ஸ்கந்தமாதா; மந்திரம் – ஓம் ஸ்கந்த மாதாயை நம: மலர் – சந்தன இலை; நைவேத்தியம் – தயிர்சாதம்; வாத்தியம் – ஜல்லரி; ராகம் – பந்துவராளி; இன்றைய தினம் கடலைமாவினால் பறவைக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை போடலாம். இன்றைய தினம் ஆறு வயது சிறுமிகளை நம்மால் முடிந்த அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்குஅழைத்து, அவர்களை ‘சண்டிகா’ என்ற திருப்பெயருடன் வழிபடவேண்டும்.

அம்பிகைக்கு தயிர் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியம் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்ததை அனைவருக்கும் அம்பிகையின் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும். இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

இன்று நாம் வழிபடும் குமாரியான சண்டிகா தேவி நவராத்திரி நாயகியரில் ஒருவர். சண்டிகா தேவியின் அவதாரம்பற்றி ஒரு புராணச் சம்பவம் சொல்லப்படுகிறது.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் நாம் சண்டிகாதேவியின் அவதார மகிமையை படிப்பதும், படிக்கக் கேட்பதும் அளவற்ற புண்ணியங்களைத் தரும்.

சண்டிகா தேவியின் புராண வரலாறு…

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இருஅரக்கர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் அரக்க குணத்தால் அனைத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலதொல்லைகள் புரிந்து வந்தனர். அவர்களை அழிக்க மும்மூர்த்தியர்களும் தங்களிடம் இருக்கும் அனைத்து சக்தியையும் ஒன்றிணைத்து ஒருமகாசக்தியை உருவாக்கினர்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட தேவியும் அரக்கர்களை அழிக்கவந்தாள். அழகு நிரம்பிய அவளை அரக்கர்களின் பணியாளர்களான சண்டன், முண்டன் இருவரும்கண்டனர். இவ்வளவு அழகு கொண்டபெண் தங்கள் மன்னர்களில் ஒருவரையே மணக்க வேண்டும் என்று எண்ணிய அவர்கள், அவளிடம் சென்று, ‘ஏய் பெண்ணே! இத்தனை அழகுகொண்ட நீ வனத்தில் அலைவதா? எங்கள் அரசரை மணம்புரிந்து எங்கள் அரண்மனையில் வாழ்வாய்!’ என்று கூறினர்.

“யார் என்னை வெற்றிக்கொள்கிறார்களோ அவரையே மணப்பேன்” என்றாள் தேவி. அவ்வாறேபோரிட்டு சண்டன், முண்டன் இருவரையும் வதைத்தாள். அதற்குள் இந்தச் செய்தியானது சும்பன், நிசும்பனை எட்டியது. தேவியை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணியவர்கள், தேவியுடன் போர்புரிய ரக்தபீஜன் என்ற அரக்கனை அழைத்தனர்.

இந்த ரக்தபீஜன் என்பவன் தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்பதற்காக ஒருவரத்தினைப் பெற்றான். அந்த வரமானது, தன் உடலிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந் தும் ஒரு ரக்த பீஜன் உருவாக வேண்டும் என்பதேயாகும்.

தேவியும் அவனுடன் கடுமையாக போர் புரிந்தாள். ஆனாலும் அவன் உடலிலிருந்து வெளியேறிய ரத்தத்திலிருந்து பல்வேறு ரக்தபீஜன்கள் தோன்றினர். இதனைக்கண்ட தேவி மிகுந்த கோபம் கொண்டு தன்னுடைய அம்சமாக ‘சண்டிகை’ என்னும் தேவியைத் தோற்றுவித்தாள். மேலும் ரக்தபீஜன் உடலிலிருந்து வெளியேறும் ரத்தத்தினை அவள் குடிக்கவேண்டும் என்றும், ஒரு சொட்டு ரத்தமும் கீழே விழக்கூடாது என்றும் கூறினாள். சண்டிகா தேவியும் அவ்வாறே செய்ய ரக்தபீஜனை எளிமையாக வதைத்தாள் ஆதிசக்தி.

அவனை அடுத்து சும்பன், நிசும்பன் அரக்கர்களை அழித்தவுடன் தேவியின் கோபமானது குறைந்தது. அவளிடம்வந்த சாமுண்டி தேவி தனது அடுத்த பணியினை வினவினாள்.

“என்னை வணங்கும் பக்தர்களுக்கு எனது அம்சமான நீ நல்லருள் புரியவேண்டும். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வரங்களையும் அருள் புரிவதுடன், அவர்களுடைய சங்கடங்களை அகற்றி சந்தோஷமான வாழ்க்கையை அருளவேண்டும்” என்று கூறினாள்.

ஆதலால் இந்த நவராத்திரி நன்னாளில் ஐந்தாம் நாளான இன்று சண்டிகாதேவியை வணங்கி, அவளுடைய அவதார மகிமையை அறிந்து போற்றி வழிபடுவோ; அவளுடைய அருளால் நாம் சங்கடம் தீர்ந்து சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...