டிரைவர் இல்லாமல் தானே இயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கி வைத்த பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி, சேவையில் டிரைவர் இல்லாமல் தானாகவேஇயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கிவைத்தார். ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில்சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

அப்போது உரையாற்றிய பிரதமர் (PM Narendra Modi) , 2025 ஆம் ஆண்டிற்குள் 25 நகரங்களுக்கு மெட்ரோ ரயில்சேவை நீட்டிக்கப்படும் என்றார். மேலும், ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா மிகவேகமாக முன்னேறுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது என குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்சேவை இருந்ததாக குறிப்பிட்ட அவர், மத்திர அரசு தொடர்ந்து பல்வேறு நகரங்களில் மெட்ரோசேவையை தொடக்கியது என்றார்.

தில்லியில் 37 கி.மீ. தூரம்கொண்ட மெஜந்தா நிறலைன் வழித்தடத்தில் ஜனக்புரி முதல் பொட்டானிகள் கார்டன் நிலையம் வரையிலும், இந்த டிரைவர்  இல்லாமல் தானே இயங்கும் மெட்ரோசேவை (Delhi Metro) அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

இதனை பிரதமர் மோடி காணொளிகாட்சி மூலம் தொடங்கி வைத்தார். விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், , 57 கி.மீ நீளமுள்ள பிங்க் நிறலைன் வழித்தடத்தி, மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வரையிலும். இந்த டிரைவர் இல்லாமல் இயங்கும் தனியங்கிசேவை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கப்படும் என தில்லி மெட்ரோ ரயில் கார்பரேஷன் (DMRC) தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து வழித்தடங்களிலும் பயன்படுத்த கூடிய தேசிய பொது பயண அட்டையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்த கார்டை வைத்திருப்பவர்கள், மெட்ரோ ரயில் மட்டுமல்லாது விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ்சேவை, பஸ் சேவை, பார்க்கிங் கட்டணம் செலுத்துதல், ஷாப்பிங் செய்தல் என அனைத்து வகையிலும் பயன்படுத்த முடியும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...