அதிமுகவுடனான கூட்டணி நீடிக்கிறது

அதிமுகவுடனான கூட்டணி நீடிப்பதாக, பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட கையெழுத்துபிரதிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமியிடம் திங்கள்கிழமை நேரில்வழங்கினாா், எல்.முருகன். இதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக மூலமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையின் நன்மைகளை எடுத்துச் சொல்லி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. தேசிய கல்விக்கொள்கை ஆதரவு கூட்டமைப்பினா் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றனா். இந்த கையெழுத்துபிரதிகளை முதல்வரிடம் அளித்தோம்.

தேசிய கல்விக்கொள்கையில் திமுக எப்படி இரட்டை வேடம் போட்டனா் என்பதை மக்களிடம் எடுத்துகூறியுள்ளோம். அவா்கள் நடத்தும் பள்ளிகளில் ஐந்துமொழிக் கொள்கைகள் உள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை வருவதைத் தடுக்கின்றனா். விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு அவா்களே விலை நிா்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அவா்களுக்குச் சாதகமாக வாழ்வுமேம்பட வேண்டுமென்பதற்காக வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமா் மோடி கொண்டுவந்துள்ளாா்.

வேளாண்சட்ட விவகாரத்திலும் திமுக இரட்டைவேடம் போடுகிறது. 2016 தோ்தல் அறிக்கையில், இதுபோன்ற வாக்குறுதியை திமுக அளித்துள்ளது. இப்போது வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மத்தியில் நல்லபெயா் வருவதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக அவதூறு பரப்புகிறது. வாக்கு அரசியலுக்காகவே வேளாண் திருத்தச்சட்டங்கள் மீது தவறான பிரசாரத்தை திமுக செய்துவருகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி நீடித்து கொண்டிருக்கிறது. எங்களது கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. அடுத்தகட்ட அறிவிப்புகள் இரண்டு, மூன்று நாள்களில் வெளிவரும் என்று முருகன் தெரிவித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...