அதிமுகவுடனான கூட்டணி நீடிக்கிறது

அதிமுகவுடனான கூட்டணி நீடிப்பதாக, பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட கையெழுத்துபிரதிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமியிடம் திங்கள்கிழமை நேரில்வழங்கினாா், எல்.முருகன். இதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக மூலமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையின் நன்மைகளை எடுத்துச் சொல்லி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. தேசிய கல்விக்கொள்கை ஆதரவு கூட்டமைப்பினா் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றனா். இந்த கையெழுத்துபிரதிகளை முதல்வரிடம் அளித்தோம்.

தேசிய கல்விக்கொள்கையில் திமுக எப்படி இரட்டை வேடம் போட்டனா் என்பதை மக்களிடம் எடுத்துகூறியுள்ளோம். அவா்கள் நடத்தும் பள்ளிகளில் ஐந்துமொழிக் கொள்கைகள் உள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை வருவதைத் தடுக்கின்றனா். விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு அவா்களே விலை நிா்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அவா்களுக்குச் சாதகமாக வாழ்வுமேம்பட வேண்டுமென்பதற்காக வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமா் மோடி கொண்டுவந்துள்ளாா்.

வேளாண்சட்ட விவகாரத்திலும் திமுக இரட்டைவேடம் போடுகிறது. 2016 தோ்தல் அறிக்கையில், இதுபோன்ற வாக்குறுதியை திமுக அளித்துள்ளது. இப்போது வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மத்தியில் நல்லபெயா் வருவதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக அவதூறு பரப்புகிறது. வாக்கு அரசியலுக்காகவே வேளாண் திருத்தச்சட்டங்கள் மீது தவறான பிரசாரத்தை திமுக செய்துவருகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி நீடித்து கொண்டிருக்கிறது. எங்களது கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. அடுத்தகட்ட அறிவிப்புகள் இரண்டு, மூன்று நாள்களில் வெளிவரும் என்று முருகன் தெரிவித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.