பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது டிராக்டர்பேரணி என்பது சரியல்ல

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விவசாயிகள் டிராக்டர்பேரணி நடத்துவது சரியல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.

புதியவேளாண் சட்டங்களை ரத்துசெய்யக்கோரி தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள பேரணிக்கு இதுமுன்னோட்டம் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் டிராக்டர்பேரணி குறித்து பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் கூறுகையில்,

‘மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்போது விவசாயிகள் எந்தவொரு இயக்கத்திற்கும் அழைப்புவிடுப்பது சரியானதல்ல. மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை(ஜன.8) நடைபெறவுள்ளது. அதுவரை விவசாயிகள் காத்திருக்கவேண்டும்.

கடந்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நேர்மையாக சுமூகமாக முடிந்துள்ளன. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வுகிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர்சிங் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியவர், ‘பாரத் ரத்னாவை காங்கிரஸ் தனது பதவிக்காலத்தில் தகுதியுள்ள பலநபர்களுக்கு வழங்கவில்லை. ஆனால் இப்போது அதேவிருதை காங்கிரஸார் சோனியா காந்திக்காக கோரியுள்ளனர் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...