ஆளுமைமிக்க தலைவர் மறைந்தபின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா புகழாரம் சூட்டினார்.
பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா பொங்கல்விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். துக்ளக்விழாவில் அவர் பேசியதாவது:வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னெடுத்து செல்வதை பிரதமர் மோடி உறுதிசெய்துள்ளார். தமிழகத்தில் வரும் காலத்தில் பா.ஜ., ஆட்சி அமையும். அதனால்தான் பல்வேறு துறையினர் பா.ஜ.வில் இணைகின்றனர்.
ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்கவைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது . இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய நாட்டா அனைவருக்கும் வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில்பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் வாழ்ந்த ஆன்மிக பூமி தமிழ்நாடு. தமிழ்மண்ணில் பொங்கல் விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. திருவள்ளுவர் மிகபெரிய ஆசான் . அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |