முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது

ஆளுமைமிக்க தலைவர் மறைந்தபின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா புகழாரம் சூட்டினார்.

பா.ஜ., தேசியதலைவர் ஜே.பி.,நட்டா பொங்கல்விழா மற்றும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். துக்ளக்விழாவில் அவர் பேசியதாவது:வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னெடுத்து செல்வதை பிரதமர் மோடி உறுதிசெய்துள்ளார். தமிழகத்தில் வரும் காலத்தில் பா.ஜ., ஆட்சி அமையும். அதனால்தான் பல்வேறு துறையினர் பா.ஜ.வில் இணைகின்றனர்.

ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்கவைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது . இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய நாட்டா அனைவருக்கும் வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழில்பேசினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் வாழ்ந்த ஆன்மிக பூமி தமிழ்நாடு. தமிழ்மண்ணில் பொங்கல் விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. திருவள்ளுவர் மிகபெரிய ஆசான் . அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...