அயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு குடியரசு தலைவர் 5 லட்சம் நன்கொடை

அயோத்தி ராமர்கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள 5 லட்சத்து 100 ரூபாயை குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் நன்கொடையாக அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலுக்குக் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்நிகழ்ச்சி நடைபெற்றது

சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர்கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவுசீக்கிரம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது

இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்கு தேவையான நிதியைச்சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில், அதன் இணைத்தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

அவருடன் வி.எச்.பி. அமைப்பின் செயல்தலைவர் அலோக் குமார், கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா உள்ளிட்டவர்களும் இருந்தனர். இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் நிதிசேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது பேசிய பாஜகவின் சுஷில்குமார் மோடி, “பிகாரில் உள்ள ஒவ்வொரு இந்து குடும்பமும் ராமர் கோயிலுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்கும் என்று நம்புகிறேன். கோயிலுக்கு எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்புடன் அதை எங்களால் சேமிக்கமுடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

மாற்று மதத்தினருக்கு ராமர் கோயிலுக்கு நிதி அளிக்கலாமா என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தவர், “தாராளமாக அளிக்கலாம். ஆனால் ஒருமசூதி கட்டப்படுகிறது என்றால் அங்கிருக்கும் இஸ்லாமியர்களே அதிக பங்களிப்பை அளிப்பார்கள். அதேபோல ராமர் கோயிலுக்கு இந்துக்கள் அதிகளவில் பங்களிப்பை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தியில் ராமர்கோயிலை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ராமர் கோயிலுக்கான திட்டம் தீட்டப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. கோயில் கட்டுமானத்திற்கு தேவையான நிதிதிரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...