புதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி;-கருத்து கணிப்பு

பாஜகவின் விஸ்வரூபத்தால் தனதுகோட்டையாக விளங்கிய கங்கிரஸின் நிலைமை பெரும் கலக்கத்தில் உள்ளது. அங்கு என்ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டாலும் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சிஅமைப்பது உறுதி என சர்வேமுடிவுகள் அடித்துகூறுகின்றன.

மோடி வருகையையொட்டி பாஜக புதுச்சேரியில் எழுச்சிபெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பாஜக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் களம்காணும் என எதிர்பார்த்த நிலையில், ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாரகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரங்கசாமி கூட்டணிக்கு வராவிட்டாலும் பாஜகவும், அதிமுகவும் அமைத்துள்ளகூட்டணி அமோக வெற்றி பெறும் என பெங்களூருவை சேர்ந்த ரெனைசென்ஸ் பவுண்டேசன் புதுச்சேரியில் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தநிறுவனம் சிலநாட்களுக்கு முன் சர்வே எடுத்த முடிவுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ் தனித்துநின்று போட்டியிடால் ஒருதொகுதியில் மட்டுமே வெல்ல முடியும். அதேவேளை பாஜக – அதிமுக கூட்டணி 23 இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் எனத் தெரியவந்துள்ளது. முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் – திமுககூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடியும். ஒருதொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றிபெறும் என அந்த் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக மட்டும் தனியாக 9 தொகுதிகளில் வெல்லும் என சர்வேமுடிவுகள் கூறுகின்றன. அதன்படி காமராஜர் நகர்தொகுதி, எம்பலம் தொகுதி, முத்தையால் பேட்டை, காலாப்பேட்டை, நெடுங்காடு, காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, மாஹி ஆகிய தொகுதிகளில் பாஜக தனித்து நின்றாலும் இந்த ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெறும் என அந்தசர்வே முடிவுகள் கூறுகின்றன.

அதேவேளை திமுக தனித்து நின்றால் ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியாது என்பதும் தெரியவந்துள்ளது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...