புதுச்சேரியில் பாஜக – அதிமுக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியே வெற்றிபெறும்

புதுச்சேரியில் பாஜக – அதிமுக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இளைஞர்களின் பேராதரவைபெற்றிருப்பது ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் இணைந்து நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. 23-27 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில், கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றி வருகிறது பாஜக.

இந்நிலையில், இந்த சட்டமன்றதேர்தலை பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியமைத்து வலுவான கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் இழந்துவிட்டநிலையில், பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதை உறுதிசெய்துள்ளது சர்வே.

ஏசியாநெட் நியூஸ் மற்றும் சி ஃபோர் நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் மார்ச் 5 முதல் 12 வரை 5077 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் கருத்துகேட்டது. அந்த கருத்துகணிப்பில், 52% பேர் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 36% பேர் மட்டுமே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், 23-27 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கும் என்று சர்வே தெரிவிக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வெறும் 3-7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று சர்வே தெரிவிக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் பேராதரவு பாஜக கூட்டணிக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. வயது வாரியாக எடுக்கப்பட்ட சர்வேயில், 18-25 வயதினரில் 56% பேர் பாஜக – அதிமுக கூட்டணிக்கும், 37% பேர் மட்டுமே திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தவயது பிரிவினர்தான் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள். அவர்களின் ஆதரவு பாஜகவிற்கு அமோகமாக இருப்பதை சர்வே உணர்த்துகிறது.

அதேபோல, 26-35 வயதினரில் 48% பேர் பாஜக கூட்டணிக்கும், 38% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித் துள்ளனர். 36-50 வயதினரில் 51% பேர் பாஜக கூட்டணிக்கும், 33% பேர் காங்கிரஸ் கூட்டணிக்கும் ஆதரவுதெரிவித்தனர்.

50 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆதரவும் பாஜகவிற்கே உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில், 53% பேர் பாஜகவிற்கும், 34% பேர் காங்கிரஸுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தசர்வேயின் மூலம் புதுச்சேரியில் இளைஞர்களின் பேராதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியேவிட்டது. இந்த சர்வேயை கண்டு காங்கிரஸ் கலங்கித்தான் போயுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...