வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு சில சீர்திருத்தங்கள் வேண்டும் – பிரதமர் மோடி

 ‘வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க, நிர்வாகத்தில் சீர்திருத்தம் முக்கியம்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடில்லியில் நடந்த தலைமை செயலாளர்களின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, அவர் தலைமை செயலாளர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியம் கூட்டு நிர்வாகம். நிர்வாகத்தில் சீர்திருத்தம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இது வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க உதவுகிறது. அரசின் செயல்திறன் உள்ளிட்டவற்றை மக்களுக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும்.

மாநிலங்களின் நிர்வாகத்தில் கட்டாயம் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சியை மேம்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம். சிறப்பான நிர்வாகத்திற்கு உள்கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சிறிய நகரங்களில் தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற இடங்களை கண்டறிந்து, அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்களின் மூத்த அதிகாரிகள், கள வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...